search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தேமுதிக பிரமுகர் கொலை"

    பாடியில் தே.மு.தி.க. பிரமுகர் வெட்டி படுகொலை செய்யப்பட்ட வழக்கில் சரணடைந்த உறவினரை காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் முடிவு செய்துள்ளனர்.
    பூந்தமல்லி:

    பாடி, சக்திநகரை சேர்ந்தவர் பாண்டியன் (வயது45) தே.மு.தி.க.வில் பொறியியல் பிரிவில் மாநில இணைச் செயலாளராக இருந்தார். கட்டுமானம் மற்றும் ரியல் எஸ்டேட் தொழிலும் செய்து வந்தார்.

    நேற்று காலை அவர், 9-ம் வகுப்பு படிக்கும் மகனை அண்ணாநகரில் உள்ள பள்ளியில் இறக்கிவிட்டு பின்னர் மோட்டார் சைக்கிளில் திரும்பி கொண்டிருந்தார். பாடி, சீனிவாசன் நகர் அருகே வந்தபோது மோட்டார் சைக்கிளில் வந்த மர்மகும்பல் பாண்டியனை வழிமறித்து சரமாரியாக வெட்டிக்கொன்றனர்.

    இதுகுறித்து கொரட்டூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். கொலையாளிகளை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது.

    இந்தநிலையில் கொலையில் தொடர்புடைய அமைந்தகரையை சேர்ந்த வினோத்குமார் என்பவர் திருக்கழுக்குன்றம் கோர்ட்டில் சரண் அடைந்தார்.

    அவர் கொலையுண்ட பாண்டியனின் நெருங்கிய உறவினர் ஆவார்.

    வினோத்குமாருக்கும், பாண்டியனுக்கும் ஏற்கனவே சொத்து தகராறு இருந்து வந்ததாக தெரிகிறது. இதற்கிடையே குமரன் நகரில் அடுக்குமாடி குடியிருப்பை பெற்றதில் பாண்டியனிடம் பணம் இருந்துள்ளது.

    இதனை அறிந்த வினோத் குமார் பணம் கேட்டு பாண்டியனிடம் தகராறில் ஈடுபட்டு வந்தார்.

    இந்த மோதலில் கொலை நடந்து இருப்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது. கொலைக்கு வேறு ஏதேனும் காரணம் உள்ளதா? என்பது குறித்து விசாரித்து வினோத்குமாரை காவலில் எடுக்க போலீசார் முடிவு செய்து உள்ளனர்.
    பாடியில் இன்று காலை தே.மு.தி.க. பிரமுகரை 6 பேர் கொண்ட கும்பல் சரமாரி தாக்கி படுகொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. #chennaimurder
    அம்பத்தூர்:

    பாடி குமரன்நகர் முல்லை தெருவை சேர்ந்தவர் பாண்டியன் (வயது 45).

    தே.மு.தி.க. பிரமுகரான இவர் அக்கட்சியில் மாநில பொறியாளர் அணி துணை தலைவராக இருந்து வந்தார். இதற்கு முன்பு நடைபெற்ற சட்டமன்ற தேர்தல்களில் வில்லிவாக்கம், தி.நகர் தொகுதியில் இவர் போட்டியிட்டுள்ளார்.

    நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தலில் ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் போட்டியிட விருப்பமனு அளித்திருந்தார்.

    கட்டிட காண்டிராக்டரான பாண்டியன் ரியல் எஸ்டேட் தொழிலிலும் ஈடுபட்டு வருகிறார்.

    இவர் இன்று காலை 9 மணியளவில் அண்ணா நகரில் உள்ள பள்ளியில் படிக்கும் தனது மகனை கொண்டு விட்டு விட்டு வீடு திரும்பி கொண்டிருந்தார். பாடி குமரன் நகர் பகுதியில் டாஸ்மாக் கடை அருகில் தனது புல்லட்டில் பாண்டியன் சென்று கொண்டிருந்தார்.

    அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த 6 பேர் கும்பல் அவரை சுற்றி வளைத்தது. அவர்களது கையில் பயங்கர ஆயுதங்கள் இருந்தன. இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த பாண்டியன் தப்ப முயன்றார். ஆனால் 6 பேரும் சுற்றி வளைத்து அவரை சரமாரியாக வெட்டினர். கிரிக்கெட் மட்டையாலும் தாக்கினர். இதில் தலை, முகம் உள்ளிட்ட இடங்களில் வெட்டு விழுந்தது. ரத்த வெள்ளத்தில் சுருண்டு விழுந்த பாண்டியன் சம்பவ இடத்திலேயே பலியானார்.

    வெட்டும்போது தடுக்க முயன்ற பாண்டியனின் வலது கையில் 3 விரல்கள் துண்டானது.

    பாண்டியனுக்கும் அதே பகுதியை சேர்ந்த சிலருக்கும் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றை விற்பனை செய்தது தொடர்பாக தகராறு இருந்து வந்ததுள்ளது.

    வீடு விற்றது தொடர்பாக பாண்டியன் சிலருக்கு புரோக்கர் கமி‌ஷனாக பணம் கொடுக்க வேண்டியது இருந்ததாகவும் கூறப்படுகிறது. இந்த முன்விரோதம் காரணமாக பாண்டியன் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள்.

    இந்த விவகாரம் தொடர்பாக நேற்று இரவு பாண்டியனை தொடர்பு கொண்டு போனில் மர்மநபர்கள் பேசியுள்ளனர். அப்போது பாண்டியனுக்கும், போனில் பேசியவர்களுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அவர்கள் தான் பாண்டியனை கொலை செய்து இருக்க வேண்டும் என்று சந்தேகிக்கப்படுகிறது.

    அம்பத்தூர் உதவி கமி‌ஷனர் கண்ணன் தலைமையில் இன்ஸ்பெக்டர்கள் விஜயகுமார், பொற்கொடி ஆகியோர் அடங்கிய தனிப்படை போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.

    பாண்டியனின் செல்போன் எண்கள் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. கொலை நடந்த இடத்தில் உள்ள கேமராக்களை போட்டு பார்த்தும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. #chennaimurder
    சேலம் மாவட்டம் தலைவாசல் அருகே தே.மு.தி.க. பிரமுகர் கொலை செய்யப்பட்ட வழக்கில், கள்ளக்காதலை கண்டித்ததால் கூலிப்படையை ஏவி கொன்றதாக கைதான மனைவி வாக்குமூலம் அளித்துள்ளார்.
    ஆத்தூர்:

    சேலம் மாவட்டம் தலைவாசல் அருகே உள்ள புத்தூர், வடக்குகாடு கிராமத்தை சேர்ந்தவர் கலியமூர்த்தி (வயது 45). டிரைவர். தே.மு.தி.க.கிளை செயலாளராகவும் இருந்து வந்தார். இவரது மனைவி ஆலயமணி(40).

    கடந்த 17-ந்தேதி கலியமூர்த்தி தனது மனைவி, 2 மகன்களையும் திருநள்ளாறு கோவிலுக்கு வாடகை காரில் அனுப்பி வைத்தார். அதன் பிறகு, அவர் தோட்டத்து வீட்டில் தங்கியிருந்தார். மறுநாள் காலையில் கலியமூர்த்தி உடல் முழுவதும் பலத்த வெட்டு காயங்களுடன் நிர்வாண கோலத்தில் பிணமாக கிடந்தார்.

    இந்த கொலை சம்பவம் குறித்து தலைவாசல் போலீசார் விசாரணை நடத்தியதில் கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்ததால் கள்ளக்காதலனுடன் சேர்ந்து கூலிப்படை வைத்து ஆலயமணியே தனது கணவரை தீர்த்துக்கட்டியிருப்பது தெரியவந்தது.

    இதனை தொடர்ந்து விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சியை சேர்ந்த கூலிப்படையினர் ஹரிகிருஷ்ணன் (19), 17 வயது சிறுவன் ஆகியோர் போலீசாரிடம் வசமாக சிக்கினார்கள். அவர்கள், கலியமூர்த்தியை கொலை செய்வதற்கு தேன்குமார் எங்களை அழைத்து சென்றார். மேலும் ஆலயமணி எங்களுக்கு ரூ.1 லட்சம், சரக்கு ஆட்டோ ஆகியவை தருவதாக கூறினார். அதன்பேரில் கலியமூர்த்தியை நாங்கள் கொலை செய்தோம் என்றனர்.

    சரணடைந்த தேன்குமார் மற்றும் ஹரிகிருஷ்ணன்

    இதையடுத்து ஆலயமணி, ஹரிகிருஷ்ணன், 17 வயது சிறுவன் ஆகிய 3 பேரையும் போலீசார் கைது செய்து ஆத்தூர் ஜே.எம்.2 கோர்ட்டில் மாஜிஸ்திரேட் உமாமகேஸ்வரி முன்னிலையில் ஆஜர்படுத்தினர். மாஜிஸ்திரேட் உத்தரவின்பேரில் ஆலயமணி சேலம் பெண்கள் சிறையில் அடைக்கப்பட்டார்.

    ஹரிகிருஷ்ணனை சேலம் மத்திய சிறையிலும், 17 வயது சிறுவனை சிறுவர் சீர்திருத்த கூர்நோக்கு இல்லத்திலும் போலீசார் அடைத்தனர்.

    கைதான ஆலயமணி போலீசாரிடம் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார். அதன் விபரம் வருமாறு:-

    நான், மகளிர் சுய உதவிக்குழுவில் இருக்கிறேன். இதனால் கடன் வி‌ஷயமாக பல்வேறு இடங்களுக்கு சென்று வந்தபோது விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சி, ஏமாந்தேர் கிராமத்தை சேர்ந்த சுற்றுலாவேன் டிரைவர் தேன்குமாருடன் (32) பழக்கம் ஏற்பட்டது.

    இந்த பழக்கம் நாளடைவில் எங்களுக்குள் கள்ளக்காதலாக மாறியது. ஜவுளிக்கடையில் துணி எடுப்பதற்காக அடிக்கடி கள்ளக்குறிச்சி சென்றேன். அப்போது, தேன்குமார் தன்னை வேனில் அழைத்துக்கொண்டு ஜவுளிக்கடை உள்பட பல்வேறு இடங்களுக்கு அழைத்து சென்றார். ஏமாந்தேர் கிராமத்தில் உள்ள அவரது வீட்டில் வைத்து நாங்கள் இருவரும் உல்லாசமாக இருந்தோம்.

    மேலும் கணவர் வீட்டில் இல்லாதபோது புத்தூரில் உள்ள தோட்டத்து வீட்டுக்கு வரவழைத்து, தேன் குமாருடன் உல்லாசமாக இருந்தேன். இதுபற்றி தெரியவந்ததும் கலியமூர்த்தி என்னை கண்டித்தார். மகளிர் சுய உதவிக்குழுவில் இருந்து தேன்குமாருக்கு எடுத்து கொடுத்த பணத்தை வாங்கி தருமாறு கேட்டு என்னை துன்புறுத்தினார். இதனால் எங்களுக்குள் அடிக்கடி தகராறு ஏற்பட்டது. இது பற்றி தேன்குமாரிடம் கூறினேன்.

    கள்ளக்காதலுக்கு இடையூறாக இருப்பதால் அவரை தீர்த்துக்கட்ட முடிவு செய்தோம். 17-ந்தேதி குழந்தைகளை அழைத்துக் கொண்டு வெளியே சென்று விடு. நான் பார்த்துக் கொள்கிறேன் என்று என்னிடம் தேன்குமார் கூறினார். அதன்படி நானும், 2 குழந்தைகளை அழைத்துக் கொண்டு 17-ந்தேதி அன்று திருநள்ளாறு கோவிலுக்கு சென்றேன்.

    இரவு தேன்குமார் கூலிப்படையை சேர்ந்த ஹரிகிருஷ்ணன் மற்றும் 17 வயது சிறுவன் ஆகியோரை மோட்டார் சைக்கிளில் அழைத்துக்கொண்டு நேராக புத்தூர் வடக்குகாடு கிராமத்திற்கு வந்தார்.

    கலியமூர்த்தி தோட்டத்து வீட்டில் இருப்பது குறித்து நான், செல்போனில் தொடர்புகொண்டு கூறினேன். அவர்கள் தோட்டத்து வீட்டுக்கு சென்றனர். அங்கு தேன்குமார் வீட்டிற்கு வெளியே நின்றார்.

    கூலிப்படையை சேர்ந்த 2 பேரும் வீட்டுக்குள் சென்று எனது கணவர் கலிய மூர்த்தியை அரிவாளால் வெட்டியும், குத்தியும் கொலை செய்தனர். அவர் அணிந்திருந்த ஆடைகளை அவிழ்த்து எடுத்துக் கொண்டு மோட்டார் சைக்கிளில் சென்று ஏமாந்தேரியில் உள்ள ஒரு குளத்தில் கொலைக்கு பயன்படுத்திய கத்திகளை தூக்கி வீசினார்கள். பின்னர் குளத்தின் கரையில் ஆடைகளை போட்டு தீ வைத்து எரித்தனர்.

    கொலையை கச்சிதமாக செய்து முடித்துவிட்டோம் என்று தேன்குமார் என்னிடம் செல்போனில் தொடர்பு கொண்டு கூறினார். பின்னர் நாங்கள் இருவரும் விடிய, விடிய செல்போனில் பேசினோம். அப்போது அவர், என்னிடம் கொலை பற்றி எதுவும் தெரியாததை போல் நடந்து கொள் என்றும் கூறினார். நானும் அதுபோல் நடந்து கொண்டேன். ஆனால், போலீசார் கிடுக்குப்பிடி விசாரணையில் நான் சிக்கிக் கொண்டேன்.

    இவ்வாறு அவர் வாக்கு மூலத்தில் கூறியுள்ளதாக தெரிகிறது.

    இந்த நிலையில் முக்கிய குற்றவாளியான தேன்குமார் திருவண்ணாமலை நீதிமன்றத்தில் நேற்று மதியம் சரண் அடைந்தார். இதையடுத்து அவர் நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அவரை காவலில் எடுத்து விசாரிக்க தலைவாசல் போலீசார் முடிவு செய்துள்ளனர்.
    சேலம் மாவட்டம் தலைவாசல் அருகே தே.மு.தி.க. பிரமுகர் கொலை செய்யப்பட்ட வழக்கில் 2 பேரை பிடித்து போலீசார் நடத்திய விசாரணையில் மேலும் பல திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது.
    சேலம்:

    சேலம் மாவட்டம் தலைவாசலை அடுத்த புத்தூர் வடக்குகாடு கிராமத்தை சேர்ந்தவர் கலியமூர்த்தி (வயது 45). டிரைவர். தே.மு.தி.க. கிளை செயலாளராகவும் இருந்து வந்தார். இவரது மனைவி ஆலயமணி (வயது 30). இவர்களுக்கு ராம்குமார்(16), அருண்குமார்(14) என 2 மகன்கள் உள்ளனர்.

    கடந்த 17-ந்தேதி தனது மனைவி, 2 மகன்களையும் திருநள்ளாறு கோவிலுக்கு வாடகை காரில் அனுப்பி வைத்தார். அதன் பிறகு அவர் தோட்டத்து வீட்டில் தங்கியிருந்தார். மறுநாள் காலை வெகுநேரமாகியும் கலியமூர்த்தி வீட்டை விட்டு வெளியே வரவில்லை. கதவு திறந்து கிடந்தும் பசுமாட்டிற்கு பால் கறக்க அவர் வராததால் சந்தேகம் அடைந்த பக்கத்து வீட்டை சேர்ந்த காங்கம்மாள் என்பவர் கலியமூர்த்தி வீட்டுக்கு சென்று பார்த்தார். அங்கே உடல் முழுவதும் பலத்த வெட்டு காயங்களுடன் நிர்வாண கோலத்தில் கலியமூர்த்தி பிணமாக கிடந்தார்.

    இந்த கொலை சம்பவம் குறித்து தலைவாசல் போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகிறார்கள். முதற்கட்ட விசாரணையில் கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்ததால் கள்ளக்காதலனுடன் சேர்ந்து கூலிப்படை வைத்து ஆலயமணியே தனது கணவரை தீர்த்துக் கட்டியிருப்பது தெரியவந்தது. விசாரணையில் மேலும் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியானது. அதன் விபரம் வருமாறு:-

    ஆலயமணி மகளிர் சுய உதவிக்குழுவில் இருக்கிறார். இதனால் கடன் வி‌ஷயமாக பல்வேறு இடங்களுக்கு சென்று வந்தார். அந்த வகையில் விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சி பகுதிக்கு சென்றபோது, அங்கு சுற்றுலா வேன் ஓட்டும் டிரைவரான ஏமாத்தேர் கிராமத்தை சேர்ந்த தேன்குமார் (32) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது.

    ஜவுளிக்கடையில் துணி எடுப்பதற்காக அடிக்கடி ஆலயமணி கள்ளக்குறிச்சி சென்றார். அவரை அங்கு தேன்குமார் தனது வேனில் அழைத்துகொண்டு ஜவுளி கடைகளுக்கு செல்வதோடு மட்டுமின்றி பல இடங்களுக்கு அழைத்து சென்று இருவரும் உல்லாசம் அனுபவித்ததாக கூறப்படுகிறது.

    ஆலயமணி தனது கணவர் வீட்டில் இல்லாதபோது கள்ளக்காதலன் தேன்குமாரை புத்தூரில் உள்ள தோட்டத்து வீட்டுக்கு வரவழைத்து உல்லாசமாக இருந்துள்ளார். இவர்களது பழக்கம் அக்கம், பக்கத்தினர் மூலமாக கணவர் கலியமூர்த்திக்கு தெரியவந்தது. இதனால் கலியமூர்த்தி தனது மனைவியை கண்டித்தார். மகளிர் சுய உதவிக்குழுவில் இருந்த மனைவி நிறைய கடன் வாங்கி இருப்பதை அறிந்து எதற்காக? கடன் வாங்கினாய் என்று விசாரித்தபோது, அவர் தனது கள்ளக்காதலன் தேன்குமாருக்கு கடன் வாங்கி கொடுத்தது தெரியவந்தது. உடனே கலியமூர்த்தி, தேன்குமாரிடம் பணத்தை திரும்ப தருமாறு கேட்டுள்ளார். இது தொடர்பாக இருவருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்தது.

    இந்த நிலையில் தேன் குமாருடன் நெருங்கி பழகுவதை தனது கணவர் தடுத்து வந்ததால் ஆத்திரம் அடைந்த ஆலயமணி அவரை தீர்த்துக்கட்ட முடிவு செய்தார். இது குறித்து கள்ளக்காதலனிடம் கூறினார். தேன்குமார் தனது ஊரை சேர்ந்த ஹரிகிருஷ்ணன் (19) மற்றும் 17 வயது சிறுவனை அழைத்து வந்து கலியமூர்த்தியை கொலை செய்தார்.

    இதற்காக கூலிப்படையை சேர்ந்த ஹரிகிருஷ்ணனுக்கு ரூ.1 லட்சம் தருவதாக ஆலயமணி கூறி இருக்கிறார். மற்றொரு வாலிபருக்கு தனது கணவர் பயன்படுத்தி வந்த சரக்கு ஆட்டோவை தருவதாக கூறி கலியமூர்த்தியை கொலை செய்யதிட்டம் வகுத்து கொடுத்துள்ளதும் போலீசார் விசாரணையில் தெரியவந்தது.

    இதில் ஹரிகிருஷ்ணனும், 17 வயது சிறுவனும் போலீசாரிடம் பிடிப்பட்டுள்ளனர். அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் அதிர்ச்சி தகவல்கள் வெளியானது.

    ஆலயமணியுடன் தொடர்பில் இருந்த 2 பேர் ஏற்கனவே மர்மமான முறையில் இறந்துள்ளனர். ஆலயமணியுடன் ஏற்கனவே கள்ளத்தொடர்பில் இருந்த தலைவாசலை சேர்ந்த ஒருவர் கடந்த ஒரு மாதத்திற்கு முன் மர்மமான முறையில் இறந்துள்ளார். தூக்குமாட்டி தற்கொலை செய்ததுபோல் தொங்க விடப்பட்டிருந்தது. அது தற்கொலை வழக்காக போலீசில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

    இதேபோல் மற்றொரு வாலிபர் சாலையில் நடந்து சென்றபோது வாகனம் மோதியது. இதில் அவர் இறந்தார். வாகனத்தை ஏற்றி கொலை செய்துவிட்டு விபத்து நடந்தது போல் மாற்றியதாக கூறப்படுகிறது. இந்த 2 வழக்குகளையும் தற்போது எடுத்து மீண்டும் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    முக்கிய குற்றவாளியான கள்ளக்காதலன் குமார் பிடிப்பட்டால் தான் மேலும் பல தகவல்கள் கிடைக்க வாய்ப்புகள் உள்ளது.
    ×